தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.
அதில் மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதி திட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பாஜக அரசு தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரை தூக்கிவிட்டு வாயில் நுழையாத வடமொழிப் பெயரை திணித்திருக்கிறார்கள் என தெரிவித்தார். மேலும் இவை அனைத்துக்கும் மேலாக நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்து சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்பட உள்ளது. வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்குமாம். பல கோடி பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டும் அன்புடன் வாழ வழி வகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்க பார்க்கிறது ஒன்றிய பாஜக அரசு. எனவே மக்களின் சீற்றத்திற்கு ஆளாகாமல் இப்போதே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்...