ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து நேற்று ஜெய் சால்மர் நகருக்கு சென்ற சொகுசு பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்தக் கோர விபத்தில் பயணிகள் 20 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர் இந்த நிலையில் 16 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தது மட்டுமின்றி ஜோத்பூரில் நடைபெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தல ஐம்பதாயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்தக் கோர சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.