திருப்பரங்குன்றத்தில் நயினார் நாகேந்திரன் உட்பட பாஜகவினர் கைது

04 December 2025

திருப்பரங்குன்றத்தில் போடப்பட்ட 144 தடை உத்தரவை ரத்து செய்த ஹைகோர்ட் கிளை நீதிபதி சுவாமிநாதன் இன்று இரவு தீபத்தூரில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் இதற்கு போலீஸ் கமிஷனர் முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். 

இந்த நிலையில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதால் தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என்று போலீசார் தரப்பு தெரிவித்திருந்த நிலையில் இந்து அமைப்பினர் இன்று காவல்துறையினருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி திருப்பரங்குன்றத்தில் திரண்டுள்ள பாஜகவினர் கலைந்து செல்ல வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மேலும் மனுதாரரை மட்டுமாவது தீபமேற்ற அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் பாஜக கோரிக்கை விடுத்ததால் அனுமதி மறுக்கப்பட்டு அங்கு போராட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட  அனைவரையும் போலீசார் கைது செய்தனர்...