அருப்புக்கோட்டை உணவு பொருட்களில் புழுக்கள் இருப்பதால் மக்கள் வேதனை !
13 June 2025
ஜூன், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் பரளச்சி நியாய விலை கடையில் உள்ள உணவுப் பொருட்களில் புழுக்கள் உள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அருப்புக்கோட்டை வட்டம் SPSPL 73 தொப்புளக்கரை PACCS கீழ் பரளச்சி என்ற கிராமத்தில் அரசு பொது நியாய விலை கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கடையில் 9:6: 2025 நேற்றைய தினம் மக்கள் அனைவரும் அரிசி வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் வாங்கிய அரிசி பையில் உள்ள அரிசியில் புழுக்கள் அதிகமாக காணப்பட்டது. இதைப் பற்றி வித்மனையாளரிடம் கேட்டபோது இந்த மாதம் அரிசி இப்படித்தான் வந்துள்ளது. கொஞ்சம் காத்திருங்கள் நல்ல அரிசி இன்னும் இரண்டு நாட்களில் வந்து விடும் வரவும் தருகிறேன் என தன்மையாக மக்களிடம் எடுத்துக் கூறினர்.
அவர் ஒரு மாற்றுத்திறனாளி விற்பனையாளர் என்பதால் மக்களும் அவர் மேல் கோபம் கொள்ளாதவாறு அவர் கூறியதை ஏற்றுக் கொண்டு சென்று விட்டனர். ஆனால் 250 குடும்பங்களுக்கு பயன்படக்கூடிய இந்த உணவு பொருட்களில் இப்படி புழுக்கள் இருப்பதால் மக்கள் வேதனை அடைகின்றனர்.
செய்தியாளர்: செல்லப்பாண்டியன்.