சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தப்பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, சட்டமன்ற எதிர்க்கட்சித்துணைத் தலைவர், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.