அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்து!

13 June 2025

பயணிகளில் ஒருவர் தவிர அனைவரும் பலி!! உலக நாடுகள் அதிர்ச்சி!
        குஜராத் தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் லண்டன் நோக்கி புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மக்கள் குடியிருக்கும் பகுதியில் விழுந்து 200-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்துள்ளனர். பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவர் மட்டுமே காயங்களுடன் உயிர் தப்பினார் என்று அண்மைத் தகவல் தெரிவிக்கிறது. எனினும் அதிகாரபூர்வமான தகவலுக்காக பயணிகளின் உறவினர்களிடையே டிஎன்ஏ பரிசோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகிய இந்த சம்பவ இடத்திற்கு 
        90 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் பயணித்துள்ளனர்.  
  விபத்திற்கு உள்ளான விமானத்தில் குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி பயணம் செய்து உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மரணமடைந்திருக்கிறார் என்ற செய்தி வந்திருக்கிறது. விபத்து நடந்த இடத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர பட்டேல் விரைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விமான பயணிகளை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். இந்த விபத்து குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தி வருகிறார். விமான பயணம் லண்டன் நோக்கி இருந்ததால் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலக தலைவர்கள் அதிர்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.
____________