பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவிவரும் நிலையில் தெஹ்ரீக் இ தலிபான் என்ற அமைப்பு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. இந்த நிலையில் இந்த அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தாலிபான் அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணங்களான குனர், ஹெல்மண்ட், பக்டியா ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவ நிலைகள், சோதனைச்சாவடிகள் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில் 58 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். மேலும் பாகிஸ்தான் படையின் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தாலிபான் அரசு அறிவித்துள்ளது.