அக்னிபத் திட்டம் : சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும்; அந்த முடிவுகள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் - பிரதமர் மோடி

20 June 2022

சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில், அந்த முடிவுகள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

பெங்களூரு, ராணுவத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக வடமாநிலங்களில் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறையும் வெடித்தது. அக்னிபத் திட்டம் ஆபத்தானது என எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: சில முடிவுகள் தற்போது நியாயமற்றதாக தெரியும். ஆனால், காலப்போக்கில், அந்த முடிவுகள் தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும்" என்றார்.