நிதானமே இறைவன் குணம்

02 April 2021

* அழிவைத் தரும் அவசரம் மனிதனின் விரோதியாகும். நிதானம் இறைவன் குணமாகும்.
* கெட்ட செயல் அனைத்திற்கும் திறவுகோல் கோபமேயாகும்.
* அதிகமான பாவங்கள் நாவினால் தான் உண்டாகின்றன.
* எவர் அதிகமாக வீண் பேச்சுக்கள் பேசுகிறாரோ அவர் ஏழ்மை நிலையை அடைவார்.
* வீண் செலவும் ஆடம்பரமும் இல்லாத முறையில் உண்ணுங்கள். தருமமும் செய்யுங்கள்.
* பெருமைக்காக ஆடை அணிகின்றவருக்கு வாழ்வில் வறுமை உண்டாகும்.
* பொருளுக்காக மட்டும் பேராசை கொண்டு பெண்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள்
.- நாயகம்