கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு

04 September 2021

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் காவல்துறையின் கூடுதல் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை வரும் 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

 

 

 

 

 

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் ஏராளமான சாட்சியங்களிடம் விசாரணை நடத்தி முடித்த பின்னும் காவல் துறையினர் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்துவதாகவும், கூடுதல் விசாரணை நடத்திட காவல் துறைக்கு தடை விதித்திடுமாறும், வழக்கில் சாட்சியான அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.

 

 

 அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்த தடையில்லை என்று கூறி, அனுபவ் ரவியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து, அனுபவ் ரவி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவை வரும் செவ்வாயன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.