நேஷனல் ஹெரால்டு வழக்கை ரத்து செய்யக்கோரி சத்தியாக்கிரக போராட்டம்!
26 July 2022
நேஷனல் ஹெரால்டு வழக்கை ரத்து செய்யக்கோரி :சென்னையில் காங்கிரஸ் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமையில்
சத்தியாக்கிரக போராட்டம்
நேஷனல் ஹெரால்ட் வழக்கு சம்பந்தமாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
தலைவர் அன்னை சோனியா காந்தியை,
விசாரணைக்கு அழைத்திருக்கும் அமலாக்க துறையை கண்டித்து,
சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில், மகாத்மா காந்தியின் வழியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.
இதற்கு, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் ஜோதி பொன்னம்பலம் தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது, மத்திய அரசுக்கு எதிராகவும், அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட துணைதலைவர் வி.ராகுமார்,விருகை பகுதி தலைவர்
கே.கே.கோபாலசுந்தரம், மாவட்ட துணை தலைவர் எஸ்.தேவதாஸ், எஸ்.சி,எஸ்.டி பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் கே.சௌந்தர், 137 வட்ட தலைவர்
எஸ்.ஜெயக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெ.டி. சாலமன்,
மாநில பொதுச்செயலாளர் எம்.அண்ணலட்சுமி, துணை பொதுச்செயலாளர் ஆர்.வி.மோகனகிருஷ்ணன்,
வட்ட துணைத்தலைவர் என்.ஞானசாமி,
வட்ட செயலாளர் பி.சொக்கலிங்கம்,
வட்ட பொருளாளர் ஜி. ராயல் ராமசாமி,
வட்ட துணை தலைவர் ஆர்.அந்தோணிராஜ், வட்ட செயலாளர் இளையராஜா, மாவட்ட செயலாளர்
இரா. ஏழுமலை மற்றும் அலெக்ஸ் பிள்ளை
எம்.கே. ஜெய்கிருஷ்ணன், எம்.கார்த்திக், ஜெ.ரவிச்சந்திரன், ஆருன்பாய், என். சொக்கலிங்கம், கே.நடராஜன், எம். காளியமூர்த்தி, பி.ராதாகிருஷ்ணன்
ஆர்.ஆறுமுகம், பூக்கடை ஜீவா, கே.செல்வம், வீரபத்திரன், ஜெ.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.