தேங்காய் தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா தெரிஞ்சிகோங்க

23 September 2021

தேங்காய் தண்ணீரை தினமும் குடித்து வருவதால் உடல் சூட்டை தணிப்பதோடு உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும் உதவுகிறது. சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்கள், இருமல் போன்ற வைரஸ்களை தேங்காய் தண்ணீர் அழிக்க உதவுகிறது.

தேங்காய் தண்ணீர் பருகுவதால் உடலுக்கு வேற என்ன நன்மைகள் கிடைக்கும் குறித்து பார்க்கலாம்.

நன்மைகள்:-

தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம் சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகளை வெளியேற்றுவதோடு சிறுநீரகத்தில் கற்கள் இருந்தால் அவற்றை கரைக்க உதவுகின்றது.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால் செரிமான பிரச்சனை நீங்கும். தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் எவ்வளவு தேங்காய் தண்ணீர் குடித்தாலும் உடலில் கொழுப்புகள் சேராது. அதுமட்டும் இது பசியை கட்டுப்படுத்தும்.     தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் அவை உடலின் ஆற்றலை அதிகரித்து தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக செயல்பட வழிவகுக்கும்.

உயர் இரத்த அழுத்தம் இருந்தால் தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடியுங்கள். அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி,உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.