இந்தியாவில் 92.8 சதவிகிதம் ரேஷன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது: அமைச்சர்

20 July 2021


இந்தியாவில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் கடந்தாண்டில் தமிழகத்துக்கு ரூ.6,317.64 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.3,993.80 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.   


நடப்பு நிதியாண்டில் ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி தமிழகத்திற்கு ரூ.1,169.38 கோடியும், கர்நாடகாவுக்கு ரூ.1,276.03 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதிலளித்தார். நாட்டில் தற்போது வரை 92.8 சதவிகிதம் ரேஷன் அட்டைகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது
என மக்களவையில் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி தகவல்