பாலையம்பட்டி ஜமீன்தார். ஸ்ரீமான்.தசரதத்தேவர் .

பாலையம்பட்டி ஜமீன்தார். ஸ்ரீமான்.தசரதத்தேவர் .

விருது நகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டத்திலுள்ள பாலையம்பட்டி ஜமீன் ராமநாதபுரம் அரசுக்கடங்கிய ஜமீன்களுள் ஒன்றாகும். இது மிகவும் பிற்காலத்திய ஜமீனாகும். இதை ராமநாதபுரத்தின் ராணியார் திரு. பர்வதவர்த்தினி நாச்சியார் உருவாக்கினார். இதன் முதல் தலைவர் திரு.பொன்னுச்சாமித்தேவரவர்களாவார் 
 இவரது மகனே புகழ்பெற்ற பொன்.பாண்டித்துரைத்தேவர் அவர்கள். இது பின்னாளில் பாலவநத்தம்- பாலையம்பட்டி என இரண்டு ஜமீன்களாக மாறியது எனக் கருத முடிகிறது. பாலையம்பட்டி ஜமீன்தாரில் புகழ்பெற்றவர் தசரதத்தேவர் அவர்களாவார்.