திருப்பரங்குன்றத்தில் தீபத்தூரில் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனி நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதாடப்பட்டதில் மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் தீர என்னை மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த ஏதாவது பிரச்சனை நேர்ந்தால் அதற்கு நீதிமன்றத்தை காரணம் கூற இயலாது அரசே பொறுப்பேற்க வேண்டும் மேலும் சட்டம் ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல சொத்து உரிமை தொடர்பானதும் கூட. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்தி வைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வருகின்ற 17ஆம் தேதி தலைமைச் செயலாளர் மற்றும் மதுரை மாநகர இணை ஆணையர் ஆகியோர் காணொளியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்ட தீர்ப்பளித்தார்...