போளூர் நகரில் வாகன விபத்தில் வியாபாரி பலி

29 October 2025

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் ஆஞ்சநேயர் கோவில் அருகே பிரசன்னா என்கிற பர்னிச்சர் கடை நடத்தி வரும் சிவக்குமார் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தன்னுடைய நண்பருடன் இரவு 8 மணி அளவில் தன்னுடைய கடைக்கு வந்து கொண்டிருந்த பொழுது சாலையின் குறுக்கே எதிரியே வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட சிவகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார் உடன் சென்ற அவரது நண்பர் அஸ்கர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் இது குறித்து போளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.