பெரிய தர்மம் செய்தால் தான் இறை ஆசி
கிடைக்கும் என்பதில்லை. சிறிய தொண்டு கூட கருணையைப் பெற்றுத் தரும்.
நீங்கள் சாலையில் நடக்கும் போது முள் கிடக்கிறது என்றால் அதைக்
கண்டு ஒதுங்கிப் போகாதீர்கள். ஓரமாக எடுத்து போடுங்கள். உங்கள் மீது இறைவன்
பார்வையை செலுத்துவான். காரணம், அவ்வழியே நடக்கும் எத்தனையோ மக்களின் பாதங்கள் காயமடையாமல் செய்து விட்டீர்கள். அது மட்டுமல்ல! இது போன்ற சிறுதொண்டுக்கு
பாவம் போக்கும் வலிமை உண்டு.
"நான் செய்த பாவம்
கொஞ்சமா... பலரிடம் வட்டி வாங்கியிருக்கிறேன். குடித்து விட்டு மனைவியை
அடித்திருக்கிறேன். மற்றவரை ஏளனம் செய்திருக்கிறேன்” என புலம்புவோர் கூட தொண்டு செய்தால்
மன்னிப்பை பெறலாம்.