வி கே சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டி தாராபுரத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜை

23 January 2021

வி கே சசிகலா பூரண உடல்நலம் பெற வேண்டி தாராபுரத்தில்  பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில் அ.ம.மு.க.வினர் சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

திருப்பூர் புறநகர் மாவட்டம் தாராபுரம் அமமுக கழகம் மாவட்ட மகளிரணி ஏற்பாட்டில் நகரச் செயலாளர் வாரனவாசை, இளைஞர் அணி இணைச் செயலாளர் செல்லதுரை, முன்னிலையில் காடு அனுமந்தராய சுவாமி  திருக்கோவிலில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் கலைமாமணி கலாராணி தலைமையில்  சிறப்பு தீபாராதனையும் சிறப்பு அர்ச்சனை வழிபாடும் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியின்போது நகரச் செயலாளர் வாரனவாசை, இளைஞர் அணி இணைச் செயலாளர் செல்லதுரை, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் பெரியசாமி, பொதுக்குழு உறுப்பினர் அப்பு, சின்னக்கம்பாளையம் பேரூர் கழக செயலாளர் கந்தசாமி, கொளத்துப்பாளையம் பேரூர் கழக செயலாளர் சக்திவேல், அண்ணா தொழிற்சங்க பேரவை விஸ்வா, 4, வார்டு செயலாளர் நாகராஜ், நகரத் துணைச் செயலாளர் பரக்கத் நிஷா, நகர மகளிர் அணி துணைச் செயலாளர் தனலட்சுமி, தலைமை கழக பேச்சாளர் கே.ஏ. கானப்ரியா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் மாரிமுத்து, நகர பொருளாளர் பூபதி, மாவட்ட பிரதிநிதி நளினி, தெய்வாத்தாள், 11வது வார்டு செயலாளர் கனிமொழி, 3,வது வட்டச்செயலாளர்கள் ஜெயராஜ், பாலகிருஷ்ணன், விவசாய அணி செயலாளர் கந்தசாமி மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் செல்வராஜ், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சுப்பிரமணி, நகரத் துணைச் செயலாளர் சுப்பிரமணி,நகர மகளிர் அணி நகர இணைச் செயலாளர் சுப்புலட்சுமி,
 உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.