தடுப்பூசி முகாம் விழிப்புணர்வு

14 April 2021

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், பெரணமல்லூர் கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கோவிட் தடுப்பூசி முகாம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு மருத்துவ அலுவலர் சீனிவாசன் பங்கேற்று, கிராம மக்கள் கொரோனா சூழலில் இருந்து விடுபட மாநில, மத்திய அரசுகளின் வழிகாட்டுதலின்படி, இந்த தடுப்பூசி முகாமில் பங்கேற்று தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் அனைவருக்கும் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.