மாணவி சின்மயானந்திற்கு ஷாஜஹான்பூரில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் படித்த போது தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்கூறினார்.
இதனையடுத்து சின்மயானந்த் கடந்த ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி கைது செய்யப்பட்டு கடந்த பிப்ரவரியில் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது கடந்த ஆண்டு சின்மயானந்த் மீது கூறிய குற்றச்சாட்டுகளை மீண்டும் உறுதிப்படுத்த மாணவி மறுத்துவிட்டார்.
புகார் கூறிய பெண் பிறழ்சாட்சியாக மாறி விட்டதால், அவர் மீதே வழக்கு தொடர அரசு தரப்பு முடிவு செய்துள்ளது.