தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்!
26 April 2021
தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை போடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா இரண்டாவது அலையின் வேகம் இந்தியர்களை நிலைகுலைய வைத்துள்ளது. அதன் காரணமாக இப்போது தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமான நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மையங்களில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வருபவர்களை திருப்பி அனுப்பிவிட்டு இரண்டாம் தவணை போட வருபவர்களுக்கு மட்டுமே போடப்படுவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இதனை மறுத்துள்ள அதிகாரிகள் ‘முதல் தவணை நிறுத்தப்படவில்லை என்றும் இரண்டாம் தவணைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும்’ தெரிவித்துள்ளனர்.