தூயமனம் வேண்டு

07 April 2021

* சத்தியத்தைப் பற்றி அறிவுபெற்ற பிறகும் நாம் மனமறிந்து பாவம் செய்தால் அதற்குப் பாவபரிகாரமாக ஒரு பலி, காணிக்கையுமில்லை.
* எளியவனைக் கருதிப் பார்ப்பவன் பாக்கியவான். தீங்கு நாளில் அவனைக் கர்த்தர் விடுவிப்பார்.
* மமதை பிடித்தவர்களையும், உள்ளூரப் பொய்களின் பக்கம் திரும்பியவர்களையும் மதிக்காமல் கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைத்திருக்கும் மனிதன் பாக்கியவான்.
* வயதானவரை அவமதிக்காதே. அவரை ஒரு தந்தையைப் போல நடத்து. இளைஞர்களைச் சகோதரர்கள் போலவும், வயதான பெண்மணிகளைத் தாய்மார்களைப் போலவும், இளம் பெண்களைச் சகோதரிகளைப் போலவும் முழுமனத் தூய்மையுடன் கருது.
* நம்மிடம் பாவம் என்பதே இல்லை என்று சொல்லிக் கொள்வோமேயானால், நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மிடம் சத்தியம் என்பதும் இல்லை.
- பைபிள் பொன்மொழிகள்