பள்ளி மாணவி துப்பாக்கியால் சுட்டு 3 பேர் காயம்

08 May 2021

அமெரிக்காவின் பள்ளிக்குச் செல்லும் சிறுமி ஒருவர் துப்பாக்கியால் சுட்டு, உடன் படிக்கும் இரு சிறுவர்கள் மற்றும் ஒரு பள்ளி ஊழியர் காயமடைந்து இருக்கிறார்கள்.


பெயர் குறிப்பிடப்படாத ஆறாம் வகுப்பு படிக்கும் 11 அல்லது 12 வயது சிறுமி, இதாஹோ என்கிற அமெரிக்க மாகாணத்தின் பாய்ஸ் நகரத்தில் இருக்கும் ரிக்பி பள்ளிக்கு துப்பாக்கியை பையில் வைத்து எடுத்து வந்திருக்கிறார்.
 
அந்த சிறுமியால் சுடப்பட்டவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.