திருவண்ணாமலையில் கத்தியை காட்டி வழிப்பறி செய்த ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

29 October 2020

திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியை சேர்ந்த காசிதுரை மகன் தமிழ்செல்வன் வயது 27 என்பவர் திருவண்ணாமலையிலிருந்து தண்டராம்பட்டு செல்லும் சாலையில் வெளிவட்ட சாலை சந்திப்பில் சென்றுகொண்டிருந்தபோது காசிம், வயது 24, த/பெ.சபிபாஷா, ஜன்னத் நகர், அவலூர்பேட்டை ரோடு, திருவண்ணாமலை என்பவர் கழுத்தில் கத்தியை வைத்து தன்னிடமிருந்த 2700/- ரூபாயை பறித்துச் சென்றதாக அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை கிராமிய காவல் ஆய்வாளர் திருமதி.K.பாரதி மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேற்கண்ட நபரின் சட்டவிரோத செயலை கட்டுப்படுத்த வேண்டி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் மாவட்ட ஆட்சியர் திரு.K.S.கந்தசாமி,IAS., அவர்கள் காசிமை குண்டர் சட்டத்தில் வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட117 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



VP silambul
திருவண்ணாமலை மாவட்டம் செய்தியாளர்