தெய்வீகத்தன்மை இருக்க வேண்டும்

08 April 2021

* பணம் படைத்தவன் கடவுளின் ராஜ்யத்திற்குள் நுழைவதை விட, ஊசியின் காதுக்குள் ஒட்டகம் நுழைவது அதிகச் சுலபம்.
* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டுஇருப்பான்.
* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத் தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். பல அசட்டுத்தனமான புண்படுத்தக் கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அவை அவர்களை நாசத்திலும், நரகாக்கினியிலும் மூழ்கடிக்கின்றன.
* சரீர முயற்சியின் பலன் சிறிதளவே. ஆனால், தெய்வீக தன்மையோ எல்லாவற்றிலும் அதிகமான பலன் தருவதாகும். இப்போதைய வாழ்விற்கும் இனி வரப்போகும் வாழ்விற்கும் உறுதி தருவது ஆகும்.
- பைபிள் பொன்மொழிகள்