குலதெய்வத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

17 April 2021


நம் வாழ்வின் பிரச்னைகள் ஏற்படும்போது அவை ஏன் நிகழ்கின்றன என்று யோசிப்பதைவிட அவற்றை எப்படிச் சரி செய்யலாம் என்று யோசிப்பதுதான் சிறந்தது என்பார்கள் ஞானிகள். நம்மில் பலரும் நம் பிரச்னைகளுக்காக ஜோதிடர்களை அணுகிக் காரணம், பரிகாரம் கேட்பதுண்டு. அப்போது பல ஜோதிடர்கள் குலதெய்வ வழிபாட்டையே பரிகாரமாகக் கூறுவர். இந்த நவீன யுகத்தில் பிரச்னை என்னவென்றால் நம் குல தெய்வம் எது என்பதையே பலர் அறியமாட்டார்கள். காரணம், பிழைப்புக்காக ஊர் மாறிச் சென்று ஓரிரு தலைமுறைகள் ஆகியிருந்தால் அவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். ஒரு சிலருக்கோ குலதெய்வத்தை எப்படி வழிபடுவது என்று வழிகாட்டப் பெரியவர்கள் வீட்டில் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் எப்படிக் குலதெய்வத்தை வழிபட்டு அவற்றின் அருளைப்பெறுவது என்பது முக்கியமான கேள்வி. ஒரு சிலர் குலதெய்வத்தை பூஜை செய்து வீட்டுக்கு வரவழைத்துக் குறி கேட்பதுண்டு. ஆனால் அது சரியா என்பன போன்ற கேள்விகளும் நம்மிடையே உள்ளன.