முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

06 April 2021

கொரோனா பரவல் அதிகரித்து வருவது குறித்து, நேற்று முன்தினம், மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அடுத்த கட்டமாக, 'வைரஸ் பரவல் நிலை மற்றும் தடுப்பூசிகளை கையாளுதல் குறித்து, அனைத்து மாநில முதல்வர்களுடன், பிரதமர் மோடி, நாளை மறுதினம் ஆலோசனை நடத்த உள்ளார்' என, அதிகாரிகள் நேற்று கூறினர்.முழு ஊரடங்கு அமலில் இருந்தபோது, பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன், பலமுறை ஆலோசனை நடத்தினார்.