கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின் செய்திக்குறிப்பு

26 November 2021

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவரின்
செய்திக்குறிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 03. 12. 2021 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
(2) 03. 12. 2021 அன்று
அறிவிக்கப்பட்டுள்ள உள்;ர் விடுமுறைக்கு ஈடாக
2021 டிசம்பர் திங்கள் இரண்டாவது சனிக்கிழமை (11. 12. 2021) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள
அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும். (3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவிற்கு
உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 1881 (Under Negotiable Instruments Act 1881) -இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 03. 12.
2021 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு
சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு. மா. அரவிந்த், இ. ஆ. ப. , அவர்களால் உத்தரவிடப்பட்டுள்ளது.

நாகர்கோயில் செய்தியாளர் சிவா