நகைக் கடை உரிமையாளரிடம் போலீஸ் விசாரணையில் பொய்யான தகவலை கொடுப்பதாக நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் இரண்டு நாள் கடையடைப்பு. 

22 January 2021

நகைக் கடை உரிமையாளரிடம் போலீஸ் விசாரணையில் பொய்யான தகவலை கொடுப்பதாக தாராபுரம் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் இரண்டு நாள் கடையடைப்பு. 

தாராபுரத்தில் பிரபல வெங்கட்ராம செட்டியார் தங்க நகை மாளிகை நகைக்கடை உரிமையாளர் சீட்டு நடத்தி 50 கோடி மோசடி செய்த வழக்கில் நகைக்கடை உரிமையாளர் காவல்துறையினரிடம் பொய்யான தகவலை தெரிவிப்பதாக கோரி தாராபுரம் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் இரண்டு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தாராபுரம் சின்ன கடை வீதியை சேர்ந்த பலராமன் என்பவரது மகன் ஹரிஹரன் இவர் தாராபுரத்தில் பொள்ளாச்சி சாலையில் நகைக் கடை நடத்தி வந்தார் அப்போது ஏலச்சீட்டு நடத்தி அதற்கு உரிய நகை தருவதாக கூறி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடம் இருந்து 50 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது ஆனால் நகைச் சீட்டு பணம் கட்டியவர்களுக்கு நகை கொடுக்காமல் நகை கடையை திடீரென ஹரிகரன் மூடி விட்டு தலைமறைவானார் இந்த மோசடி தொடர்பாக போலீசார் அவரை தேடி வந்த நிலையில் திருச்சியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அரிகரன் தனது குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் இதையடுத்து விடுதி உரிமையாளர் அவர்களை மீட்டு தனியார் மருத்துவமனை அனுப்பி வைத்தனர் அங்கு அவர் சிகிச்சை பெற்று திரும்பினார் அதன் பின்னர் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹரிஹரன் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த விசாரணையின்போது தாராபுரம் பகுதியில் இயங்கிவரும் 6 நகைக் கடைக் காரரிடம் வரவு செலவு செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஹரிஹரனை  20ஆம் தேதி தாராபுரம் அழைத்து வந்தனர்.பின்னர் அவருடைய வீடு மற்றும் தானிய மண்டி அல்லாது தாராபுரத்தில் உள்ள வேறு சில நகைக் கடைகளுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது தாராபுரம் பகுதியில் பொதுமக்களிடத்தில் சீட்டு பணமாக வசூல் செய்த காசினை தங்கமாக மாற்றி நகைக் கடைகளுக்கு கொடுத்ததாக சில கடைகளை போலீசாரிடம் காண்பித்துள்ளார் இதனால் அதிர்ச்சி அடைந்த நகை கடைக்காரர்கள் ஒன்றிணைந்து இரண்டு நாட்களுக்கு முன்பு தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்துதாராபுரம் நகைக்கடை உரிமையாளர் சங்கத்தினர் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தாய் ரெஸ்டாரன்ட் தனியார் விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினர் அதில் போலீசாரிடம் தவறான தகவலை தெரிவித்து வரும் வெங்கட்ராம செட்டியார் நகை கடையின் உரிமையாளர் ஹரிஹரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறியும் அவர் சொல்லும் பொய்யான தகவல்களை காவல்துறையினர் நம்ப வேண்டாம் எனவும்,அப்படி கொடுத்த வரவு செலவு ஆதாரத்துடன் இருந்தால் நகைக்கடை உரிமையாளர் சங்கமே சம்பந்தப்பட்ட நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து வாங்கி ஹரிஹரனுக்கு கொடுத்து விடுவோம்,அப்படி இல்லாத பட்சத்தில் இவர் வேண்டுமென்றே தன்னையும் தன் குடும்பத்தையும் தப்பித்துக் கொள்வதற்காககாவல்துறையினரிடம் பொய்யான தகவலை தெரிவிப்பதாக கோரி வெள்ளிக்கிழமை இன்றும் சனிக்கிழமை நாளையும் என இரு நாட்களுக்கு வெங்கட்ராம செட்டியார் நகைக்கடை உரிமையாளர் ஹரிஹரனை கண்டித்து அடையாளமாக 44 நகைக் கடைகள் அடைக்கப் பட்டுள்ளது.

மேலும்நகை வாங்குவதற்காக வந்த வாடிக்கையாளர்கள் நகைக் கடைகளின் முன்பு வெகு நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றதால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.