தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோயிலில் தசரா 3ம் நாள் மண்டகப்படி திருவிழா நடைபெற்றது

10 October 2021

தூத்துக்குடி மேலூர் பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் 76 ஆம் ஆண்டு தசரா தசரா திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட பித்தளை சப்பரத்தில் அம்பாள் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அம்பாளை தரிசிக்க திருக்கோவில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு திமுக மாநில செயற்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தொடர்ந்து  தூத்துக்குடி தெப்பகுளம் மாரியம்மன் கோயிலில் மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு அம்பாள் கொலுகாட்சி, தீபாராதனையுடன், மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு சைவ சபைத் தலைவர் டி.ஏ.தெய்வநாயகம் தலைமை தாங்கினார், அம்பாள் பித்தளை சப்பரத்தில் கொலுகாட்சியில் அருள்பலித்தார். தொடர்ந்து தீபாராதனையுடன், மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது, பெண் குழந்தைகள் முளைப்பாரி எடுத்தனர். நிகழ்ச்சிக்காண ஏற்பாடுகளை  கட்டளைதாரர் கீதா செல்வமாரியப்பன் மற்றும் டாக்டர் சிபி ஆகியோர் செய்திருந்தனர்.
இந் நிகழ்ச்சியில் லாரி புக்கிங் அசோசியேசன் தலைவர் சுப்புராஜ், திமுக பொதுகுழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா, தமிழ்நாடு வ.உ.சி பேரவையின் அமைப்பு தலைவர் நெல்லையப்பன், நிர்வாகிகள் தங்கையா, மந்திரமூர்த்தி மற்றும் திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாநகர மாணவரணி துணை செயலாளர் சோமா, பக்தர்கள் கலந்து கொண்டனர்.