கரூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,29,300 தொகை பறிமுதல்

03 March 2021

கரூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 
ரூ.2,29,300 தொகை பறிமுதல்

 கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நிலையான கண்காணிப்பு குழு முருகன் என்பவர் தலைமையில் கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் பரமத்தி நொய்யல் சாலையில் முன்னூர் என்ற இடத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது புகழூர் வட்டம் தென்னிலை பகுதியை சேர்ந்த வடிவேல் மற்றும் மூன்று பேர்   வந்த காரினை சோதனையிட்டபோது அதில் ரூபாய் 229300/ உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப் பட்டு மேற்படி தொகை பறிமுதல் செய்யப்பட்டது   அரவக்குறிச்சி சார் கருவூலத்தில ஒப்படைக்கப்பட்டது.