சர்க்கரை நோயை சட்டென குறைக்கும் மூலிகை பொடி! இப்படி பயன்படுத்தி பாருங்க..!

21 December 2021

இன்றைய காலக்கட்டத்தில் பலரையும் வாட்டக்கூடிய நோய் தான் சர்க்கரை நோய் இருக்கின்றது. சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மரபணு போன்றவற்றால் ஏற்படலாம்.

இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்தவது நல்லது. இல்லை என்றால் உயிருக்கே உலை வைத்து விடும்.அந்தவகையில் தற்போது சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கம் ஒரு சில மூலிகை பொடி என்னென்ன என்பதை பார்ப்போம்.கருஞ்சீரகப் பொடிகருஞ்சீரகத்தை இலேசாக வாசம் போக அரைத்து வைத்துகொண்டு, அதை வெதுவெதுப்பான நீரில் கால் டீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் கட்டுப்படாத ரத்த சர்க்கரை அளவு பெருமளவு குறையும்.இதை எடுத்துகொள்வதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்வது அவசியம். பிறகும் இதை தொடர்ந்து சாப்பிடாமல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சாப்பிட்டு ஒரு மாத இடைவெளியில் மீண்டும் சர்க்கரை பரிசோதனை செய்யவேண்டும்.தொடர்ந்து ரத்த சர்க்கரை கட்டுக்குள் இல்லாமல் இருந்தால் அவர்கள் கருஞ்சீரக பொடியை சாப்பிட்டதும் பிறகு பரிசோதனை செய்து அதற்கேற்ப இடைவெளிவிட்டு எடுத்துகொள்ளலாம்.வெந்தயப்பொடிவெந்தயத்தை இலேசாக வறுத்து பொடித்து வைத்து தினமும் காலையில் வெந்தய டீயாக குடித்துவரலாம். கசப்பு சுவை இருக்கும் என்றாலும் தினமும் ஒரு கப் அளவு குடித்துவந்தால் போதுமானது.வெந்தயத்தை முளைகட்டியும் தினம் ஒரு டீஸ்பூன் வீதம் எடுத்துகொள்ளலாம். வெந்தயம் சாப்பிடும் போதும் பரிசோதனை அவசியம். சர்க்கரையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவர உதவும் வெந்தயம் சர்க்கரையின் அளவை குறைத்துவிடவும் கூடும் என்பதால் அவ்வபோது பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.​பாகற்காய் பொடிபாகற்காயை வட்டவடிவில் நறுக்கி நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துகொண்டு அதை சூப் செய்ய பயன்படுத்தலாம். இதை மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடித்துவந்தால் போதும். சர்க்கரை கட்டுக்குள் இருக்கும்.​நாவல் பழக்கொட்டையின் பொடிநாவல் பழத்தின் கொட்டையை எடுத்து நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்து வைத்து கொள்ளவும். தினமும் ஒரு கிராம் அளவு இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்திருப்பதை பரிசோதனையில் அறியலாம்.வெறும் வயிற்றில் சாப்பிடாமல் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு இதை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.​மூலிகை பொடிகருந்துளசி, முருங்கை இலைகள், மாமர இலையில் இருக்க கூடிய மாந்தளிர். இந்த மூன்றையும் சம அளவு எடுத்து நிழலில் உலர்த்தி பொடித்து வைக்கவும்.பிறகு தினமும் காலையில் அரை டீஸ்பூன் அளவு பொடியை ஒரு டம்ளர் நீரில் சேர்த்து அவை பாதியாக வரும் வரை சுண்ட வைத்து பொறுமையாக குடிக்க வேண்டும். தினமும் இதை குடித்துவந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரக்கூடும்.