பெண்களுக்கான முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆன்மீக தகவல்கள்!!

04 September 2021

ஆன்மிகத்தினை பற்றி ஒவ்வொரு பெண்ணும்  தெரிந்து கொள்வது, ஆன்மீகம் சார்ந்த மனதினை அமைதிப்படுத்தவும், இறை சிந்தனையை அதிகமாக்கவும் உதவுகிறது. இறைவனை பூஜிப்பதால் நன்மைகள் கோடி. ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து கொள்ளக்கூடிய ஆன்மீக தகவல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை பெண்கள் இரண்டு புருவ மத்தியிலும், வகிட்டிலும் இட்டுக்கொள்ள வேண்டும்.


திருமாங்கல்யத்தை மஞ்சள் கயிற்றில் மட்டுமே கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

தெற்கே பார்த்து நின்றுகொண்டு பெண்கள்  கோலமிடக் கூடாது.

ஒரே ஒரு விரலில் மட்டுமே திருமணமான பெண்கள் மெட்டி அணிய வேண்டும். அப்படி அணியாமல் மூன்று விரலில் மெட்டி அணிந்தால் கணவருக்கு ஆபத்து ஏற்படும்.

கர்ப்பிணி பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போகக்கூடாது.


பெண்கள் அமாவாசை, தெவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

பெண்கள் வீடுகளில் வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயை சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

கோவில்களில் தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

பெண்கள் கோவில்களில் தெய்வத்தை வணங்கும் பொழுது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்க வேண்டும்.

மாதவிலக்கின்போது பெண்கள் எக்காரணம் கொண்டும் பூ வைத்துக் கொள்ளக்கூடாது.

முந்தானையை பெண்கள் எப்போதும் தொங்க விட்டு நடக்கக்கூடாது.

பெண்கள் ஆன்மீகத்தின் உண்மையை புரிந்து கொண்டு இறைவழிப்பாட்டை செய்தால் நற்பலன்கள் கிடைக்கக் கூடும்.