பாதிரி லஷ்மி நாராயணப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள்:

15 April 2021


 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணப் பெருமாளுக்கு புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ கைங்கர்யம் டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஊர்ப் பொதுமக்கள் பலரும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர்.