“ஹோட்டல்” என்ற பெயரில் ஏழைகளின் காசை பிடுங்கும் சூரி !
19 July 2022
"ஹோட்டல்” என்ற பெயரில் ஏழைகளின் காசை பிடுங்கும் சூரி !
தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளவர் நடிகர் சூரி. காமெடியானாக நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது கெட்டப்பை மாற்றி ஹீரோவாக நடித்து வருகிறார்.
சூரி மதுரை சுற்றி பல இடங்களில் அம்மா உணவகம், அம்மா காபி, அம்மா டிபன் சென்டர் என பல கிளைகளை வைத்து சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சாப்பாட்டு கேன்டீன் டெண்டர் ஒன்றை எடுத்துள்ளார் நடிகர் சூரி இந்த டெண்டர் எடுத்த பொழுது பெரும் சர்ச்சை வெடித்தது. சூரி தனது செல்வாக்கை பயன்படுத்தி இதை ஈசியாக பெற்றுக் கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.
குறைந்த விலையில் இங்கு வரும் ஏழைகளுக்கு உணவு வழங்கி சேவை செய்ய இந்த உணவகம் திறக்கப்பட்டதாக சூரி தரப்பில் தெரிவித்துள்ளது ஆனால் மதுரை அரசு மருத்துவமனை பக்கத்தில் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் குறைந்த விலையில் உணவு தருவதாக கூறிக்கொண்டு மிகச் சிறிய அளவு இட்லி, வடை அதிக விலைக்கு விற்கப்படுகிறது இதுபோன்று டீ காபி சாப்பாடு என அனைத்தும் குறைவாக கொடுத்து ஏழை வயிற்றில் அடித்து சம்பாதித்து வருகிறார் சூரி.
தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் பணமில்லாதவர்கள் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள் அங்கு சூரி அதிக விலைக்கு சாப்பாடு உணவுகளை விற்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்து உள்ளனர்.