கொரானோநோய் தடுப்பு பணியில் சுகாதார சேவை டிரஸ்ட்
11 May 2021
கொரானோநோய் தடுப்பு பணியில் சுகாதார சேவை டிரஸ்ட்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடபுதுப்பட்டி யில் சுகாதார சேவை டிரஸ்ட் சார்பில் அதிகமாக பரவி வரும் கொரானோ நோய்த்தொற்றை தடுப்பதற்கு பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து மக்களுக்கு முககவசம் கிருமிநாசினி மற்றும் அதற்கான விழிப்புணர்வு ஆகியவற்றை இந்த டிரஸ்ட் மூலமாக செய்து வருகின்றார்கள்
இதனைத் தொடர்ந்து 7-5 2021 ஆம் தேதி தேனி அல்லிநகரம் காவல் நிலையத்திற்க்கு மக்கள் பணியாற்றும் முன்கள பணியாளர்களான காவல்துறைக்கு நோய் தொற்றைதடுக்கும் வகையில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் வழங்கப்பட்டது
சுகாதார சேவை டிரஸ்ட் நிறுவனர் மற்றும் மேனேஜிங் டிரஸ்ட்டி திருமதி. இராஜேஸ்வரி அவர்கள் அல்லிநகரம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் திருமதி .மதனகலா அவர்களிடம் வழங்கினார்
மேலும் சுகாதார சேவை டிரஸ்ட் மூலமாக அப்பகுதி மக்களுக்கு கொரானோநோயை தடுப்புக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்புக்கான ஆலோசனை வழங்கும் நிகழ்வில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டார்கள்