அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் 6,7 தேதிகளில் இளநிலை பாட பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு

04 October 2021

செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு வருகிற 6,7 தேதிகளில் இளநிலை பாட பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு

செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் இதுவரை சேராத மாணவர்களுக்கு வருகிற 6,7 தேதிகளில் இளநிலை பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கின்றது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி முதல்வர் என்.கலைவாணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு, செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் இதுவரை சேராத மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற 6 மற்றும் 7ம் தேதிகளில் மாணவர் சேர்க்கை நடக்கின்றது. அதன்படி 6-10-2021 இளநிலை அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும், 7-10-2021ம் தேதி கலை பிரிவினர்களு்கும் கலந்தாய்வு நடக்கின்றது. மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு சேர்க்கை உறுதியில்லை. அரசு நெறிமுறைகளின்படி. மாணவர்களின் இன வாரியாகவும் மதிப்பெண் அடிப்படையிலும் சேர்க்கை நடைபெறும்
மாணவர் சேர்க்கைக்கு வரும் வரும்போது ஆன்லைனில் பதிவு செய்த மற்றும் பெற்றோரின் கையொப்பம் பெற்ற விண்ணப்பம், அசல் மாற்றுச் சான்றிதழ, அசல் சாதிச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பதினோராம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு. மதிப்பெண் பட்டியல் (தலைமை ஆசிரியரிடம் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும்.), ஆதார் அட்டை, மேற்குறிப்பிட்ட அனைத்துச் சான்றிதழ்கள் 3 நகல்கள் கொண்டு வர வேண்டும் 5 நிழற்படங்கள் (பாஸ்போர்ட் சைஸ் போட்டோ) எடுத்து வரவேண்டும் மாணவர்களின் கட்டண விவரம் பி.ஏ., பிபிஏ பாட பிரிவிற்கு ரூ2601ம், பி.எஸ்.சிக்கு ரூ.2621ம், பி.எஸ்.சி. கணினி அறிவியல் மற்றும் பி.சி.ஏ பாட பிரிவிற்கு ரூ.2021ம் சேர்க்கை கட்டணத்தை கல்லூரி அலுவலகத்ில் நேரில் பணமாக செலுத்த வேண்டும். கொரோனா விதிமுறைகள் காரணத்தினால் பெற்றோர்கள் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கப்படமாட்டார்கள். சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கல்லூரிக்கு உள்ளே நுழையும்போது கைகளைக்  கழுவ வேண்டும். மாணவர்கள் சமூக இடைவெளியைப்  பின்பற்ற வேண்டும்.