ஓபிசி மாணவ-மாணவிக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு உடனே முடிவெடுக்க பாஜக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

29 October 2020

மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டே 50% இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்தியில் ஆளும் பாஜக அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று தாராபுரம் அண்ணா சிலை முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மாவட்டச் செயலாளர் தமிழ்முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

தாராபுரம் நகர செயலாளர் செந்திக்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் விவசாயிகள் பாதுகாப்பு இயக்க மாநில துணைச்செயலாளர் முத்தமிழ் வேந்தன், மாவட்ட துணை செயலாளர் ஆற்றலரசு ஒன்றிய செயலாளர் தே. தனபால்,மாவட்ட அமைப்பாளர்கள் ரங்கநாதன்,போராளி தினகரன், விவசாயிகள் பாதுகாப்பு இயக்கத்தின் நகர அமைப்பாளர் தண்டபாணி, ஒன்றிய துணை செயலாளர் இராச சேகர், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் பொன்னுச்சாமி,ஒன்றிய பொறுப்பாளர்கள் ஸ்டேன்லி, இராசாமனி,நகர பொறுப்பாளர் ரவி, முகாம் செயலாளர்கள் ஆணந்தன், கோபால் உள்ளிட்ட தோழர்கள் திரளானோர் கலந்து கொண்டு தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.