விருது நகரில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கிய மஜக வினர்!

26 January 2022

ஜன:26.,

73 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல்,  உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகர செயலாளர் சம்சுதீன், அவர்கள் தலைமையில் தேசிய கொடியேற்று விழா நடைப்பெற்றது.

நிகழ்ச்சியில் தொழிற்சங்க மாவட்ட தலைவர் முருகேசராஜா, முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் கண்மணி காதர், அவர்கள் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் ஸ்ரீவில்லிப்புதூர் நகர செயலாளர் ஷாஜகான்,  ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் தமிமுன்அன்சாரி,  மற்றும் மாவட்ட, நகர,  நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.