சேலம் ஊராட்சி மன்றங்களில் குடியரசு தின விழா

26 January 2022

இந்திய தேசத்தின்  73 வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் உற்சாகத்துடனும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது 


அதன் ஒரு பகுதியாக சேலம் பூலாவரி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஊராட்சி மன்ற தலைவர் ராதா செல்வம்  தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்


 இதேபோல அயோத்தியாபட்டினம் ஒன்றியத்திற்குட்பட்ட ட.பெருமாபாளையம் ஊராட்சி பகுதியில் 73 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சங்கர் என்கிற சாமிநாதன் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார் . அதனைத் தொடர்ந்து ஏழை-எளிய பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதேபோல சேலம் மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சி பகுதிகளில் குடியரசுதினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.