திருச்சியில் எம்ஜிஆர் சிலையிடம் கோரிக்கை மனு

21 January 2021

திருச்சியில் எம்ஜிஆர் சிலையிடம் கோரிக்கை மனு  

விவசாய சங்கதலைவர்  அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் எம்ஜிஆர் சிலை யிம் மனு கொடுக்க சென்றனர் அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இரு நபர்களுக்கு மட்டும் அனுமதியளித்து அனுப் பினர் சிலைக்கு மாலை அணிவித்து சிலையிடம் ஐயாக்கண்ணு மனுவை அளித்தார் மேலும் தொடர் மழையால் அழிந்து வரும் நெற்பயிருக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் இதர பயிர் வகைகளுக்கு 20 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் வெங்காயத்திற்கு 40,000 வழங்க வேண்டும் விவசாயிகளின் இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்து வருகிறார் அதேபோல் சீர்மரபினர் 68 சாதிகளுக்கு ஒரே டி என் டி சான்றிதழ் வழங்க கோரியும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை நிறைவேற்றவில்லை எனவே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை இடம் மனு கொடுத்து போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர் விவசாயிகள் சாலையில் படுத்து மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் தமிழக முதல்வருக்கு நல்ல புத்தியினை வழங்க வேண்டுமென எம்ஜிஆரிடம் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தனர் இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.