திருவாரூர் அருகே வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தைஅகற்றி நூலகம் கட்டித்தர பொதுமக்கள் வலியுறுத்தல்

24 June 2021


திருவாரூர் அருகே வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை அகற்றி நூலகம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சேனியர் தெருவில் பழமை வாய்ந்த கட்டிடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இந்த வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகமும், வேளாண்மை விரிவாக்க மைய கட்டடமும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளாக வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் பராமரிப்பின்றி கிடக்கிறது. மேலும் இந்த கட்டடத்தில் அரசமரங்கள் வளர்ந்து விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. எந்தநேரத்திலும் இந்த கட்டடம் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. 

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பராமரிப்பின்றி பாழ்பட்டு கிடக்கும் வேளாண்மை விரிவாக்க மைய கட்டடத்தை அகற்றிவிட்டு, அதே இடத்தில் அரசு நூலகம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கட்டடம் இடிந்து விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?