ராக்கெட் ராஜா வை விமர்சித்து வரும் மலேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு.

27 January 2022

பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகளை தரக்குறைவாக விமர்சித்து வரும்  மலேசிய பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருச்சி மாவட்ட காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு.


பனங்காட்டு படை கட்சியின் சார்பாக ராக்கெட் U.தங்கேஸ் தலைமையில் அக்கட்சியினர் திருச்சி மாவட்ட கண்டோன்மெண்ட் காவல் உதவி ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். மனுவில் எங்கள் கட்சியில் மாநில ஒருங்கிணைப்பாளராக உள்ள ஹரிகோபலகிருஷ்ணன் என்ற ஹரி நாடார் என்பவரை ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்து வரும் மலேசியாவைச் சேர்ந்த மஞ்சு  என்ற தனலட்சுமி என்பவர் தொடர்ந்து பல மாதங்களாக எங்கள் பனங்காட்டு படை கட்சியின் நிறுவனத் தலைவர் ஜெ.ராக்கெட் ராஜா மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை தரக்குறைவான வார்த்தைகளால் ஏசியும்,திட்டியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மிரட்டுவதாகவும்,சில நபர்களின் தூண்டுதலின் பேரில் பனங்காட்டு படை கட்சியின் வளர்ச்சிக்கு இடையூறு செய்வதாகவும்,மலேசியாவை சேர்ந்த மஞ்சு என்ற தனலட்சுமி விசாவின் அடிப்படையில் இந்தியாவில் பல மாதங்களாக இருப்பது மர்மமாக உள்ளதாகவும். மஞ்சு என்ற தனலட்சுமி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மனுவில் குறிப்பிடபட்டு இருந்தது.

மனு வழங்கிய போது  பனங்காட்டு படை கட்சியின் விஜய் பிரபாகரன் நாடார், திருநாமம் நாடார் மற்றும் ராஜ்குமார் நாடார்  உடன் இருந்தனர்...