பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.

08 March 2021

ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே வடக்கு மற்றும் தெற்கு வஜீரிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை இரண்டு தனித்தனி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

தெற்கு வஜீரிஸ்தானின் டடகேல், வடக்கு வஜீரிஸ்தான் மற்றும் சோய்டாவில்    பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து  ராணுவத்தினர்  அந்த பகுதியைச் சுற்றி வளைத்து துப்பாக்கிச் சூடு நடத்தினர்.  இதில் 5 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

மேலும், கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் மாகாண தலைநகர் குவெட்டாவில் தாக்குதல்களை நடத்த சதித்திட்டம் தீட்டியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள், தானியங்கி ஆயுதங்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் சாதனங்களை போலீசார் கைப்பற்றினர்.