இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ஆக்சிசன் செறிவூட்டி வழங்கப்பட்டது

23 July 2021



 திருவிடைமருதூரில் உள்ள அரசு மருத்துவமனையில் திருவிடைமருதூர் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக ஆக்சிசன் செறிவூட்டி மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ரெட் கிராஸ் சேர்மன் பி.எம் பாஸ்கரன் தலைமை ஏற்க திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமை கொறடா டாக்டர் கோவி.செழியன் கலந்து கொண்டு அதன் பயன்பாட்டை கூறி மருத்துவமனையில் ஒப்படைத்தார்.இந்த நிகழ்வில் ரெட்கிராஸ் மாநில அமைப்பால் வழங்கப்பட்ட ஆக்சிஜன் செறிவூட்டியை தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் கலந்துகொண்டு திருவிடைமருதூர் கிளையிடம் ஒப்படைத்தார்.

அரசு மருத்துவ மனை தலைமை அலுவலர் மலர்கொடி மற்றும் மருத்துவர்கள் ராஜாராம் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை வைத்து சிறப்பாக விளக்க உரை ஆற்றினார்.

இன்றைய நிகழ்ச்சியில் கரோனோ கட்டுப்பாட்டு அறையில் சேவை செய்த உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன 

மேலும் திருவிடைமருதூர் பகுதியில் உள்ள வாழ்வாதாரம் இழந்த 25 நபர்களுக்கு நிவாரணப் பொருட்கள்
திருவிடைமருதூர் ரெட் கிராஸ் கிளையின் சார்பில் வழங்கப்பட்டன.

கும்பகோணம் பகுதியில் சிறப்பான சேவை செய்து வருகின்ற அன்னை கல்லூரியில் கரோனா தடுப்பு முகாமில் கலந்துகொண்டு சிறப்பான சேவை செய்து வருகின்ற பெஞ்சமின் அவர்கள் பாராட்டப்பட்டார்.

விழாவில் ரெட்கிராஸ் துணைத் தலைவர் வீரமுத்து, கௌரவ தலைவர் அழகு பன்னீர்செல்வம், உறுப்பினர்கள்
சுந்தர ஜெயபால், கார்த்திகேயன் பாரதிதாசன் சீனிவாசன் ரவிச்சந்திரன் மகேஷ் ஞானசேகரன் பைஸ் அகமது அன்புமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ரெட் கிராஸ் செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். நிறைவாக துணைத்தலைவர் வீரமுத்து நன்றி கூறினார்

H.தஸ்லீம் அஹமது 
மாவட்ட செய்தியாளர், தஞ்சாவூர்.