புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் தனியார் பள்ளி மாணவர்களுகக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம் - வகுப்புகள் முழுவதிலும் வீடியோ பதிவு செய்யப்படுகிறது.

07 June 2021


கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கியது. 

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மாணவ மாணவிகளிடம் தொடர் புகார்கள் எழுந்தநிலையில் பள்ளிகல்வித்துறை சார்பில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில் அதனை பின்பற்றி இன்று ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. ஆன்லைன் வகுப்புகளில் பங்குபெறும் மாணவர்கள் சீருடை அணிந்தபடி பங்கேற்கவும், வகுப்புகளை நடத்தகூடிய ஆசிரியர்கள் வகுப்பறைகளில் இருப்பது போன்றே உடைகள் அணிந்து வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்களின் பின்புற சூழலில் குடும்பத்தை சேர்ந்த மற்ற நபர்களின் நடமாட்டமோ, குரலோ கேட்க்கூடாது என்பது போன்ற நடைமுறைகள் பின்பற்றப்ம்பட்டது. இதேபோன்று மாணவர்களின் பெயரில் ஆன்லைனில் மாணவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் ஆன்லைன் வகுப்பு முடியும் வரை வீடியோவில் முழுமையாக இடம்பெற வேண்டும் வேறு எங்கும் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டு அவை பின்பற்றப்பட்டன.


ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடவேளையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் எனவும், நாளொன்றுக்கு ஒரு ஆசிரியர் ஆறு வகுப்புகளும், வாரத்திற்கு 28 ஆன்லைன் வகுப்புகளும் எடுக்க வேண்டும், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் எனவும், 30 முதல் 45 நிமிடங்கள் என 2 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுவதோடு, இதனிடையை ஆன்லைன் வகுப்புகளுக்கு குழந்தைகளைக் கட்டாயப்படுத்த கூடாது என வழிகாட்டு நெறிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெற்றது. ஆன்லைன் வகுப்புகள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் தொடங்கிய நிலையில் மாணவர்கள் தங்களது வகுப்புகளுக்கான பாடங்களை கற்க தொடங்கினா்