நாகையை அடுத்த நாகூர் நூர்சா தைக்கால் தெருவில் நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.

08 October 2020

நாகையை அடுத்த நாகூர் நூர்சா தைக்கால் தெருவில் நூர்சாஹிப் ஒலியுல்லாஹ் தைக்கால் உள்ளது. இந்த தைக்காலில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது. தைக்கால் கலிபா உபைத்துல் ரஹ்மான் சாஹிப் ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசினார்.

இதில் சாதி, மத, பேதமின்றி பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தைக்கால் நிர்வாகிகள் செய்திருந்தனர்.