சன்ரைசர்ஸ்
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி பேட்டிங்கில்
மிரட்டினார் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன்.
202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை
விரட்டிய பஞ்சாப் அணியின் பேட்ஸ்மேன்கள் ஒருபக்கம் விக்கெட்டுகளை இழந்து
கொண்டிருக்க ஒற்றையாளாக நின்று விளையாடினார் பூரன். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக அவர் பறக்கவிட்டுக்
கொண்டிருந்தார்.
பூரன் களத்தில் இருந்தவரை ஹைதராபாத் கேப்டன் வார்னர் கண்ணில்
தோல்வி பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. அதுவும் ஒரே ஓவரில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி தள்ளியதால் ஆட்டத்தின்போக்கே மாறியது
போல் தோன்றியது.
நீண்ட நேரம்
களத்தில் நின்று தனி ஒருவனாக போராடிய பூரன் 37 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். அதில், ஐந்து பவுண்டரிகளும், ஏழு சிக்ஸர்களும் அடங்கும். அவர் அடித்தவை பெரும்பாலும்
இமாலய சிக்ஸர்கள்.
பெரிய மைதானமான
துபாய் ஸ்டேடியத்தில் 106, 105 மற்றும் 100 மீட்டர்கள் முறையே மூன்று சிக்ஸர்களை 100 மீட்டர்களுக்கு மேல்
பறக்கவிட்டிருந்தார் பூரன்.அதிலும் அப்துல்
சமாதின் ஒரே ஓவரில் நான்கு சிக்ஸர்களைவிளாசியதை போல்
இன்னொரு ஓவரை அவர் சரியாக கணித்து அடித்திருந்தால் பஞ்சாப் அணி வசம் வெற்றி
வந்திருக்கும் என்பது உண்மையே.