புத்தாண்டு முன்னிட்டு தெனனாங்கூர் பாண்டுரங்கன் பழ அலங்காரத்தில் காட்சி

14 April 2021

பிலவ வருடப் பிறப்பு முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் கோவிலில் குருவாயூரப்பன் அலங்காரத்தில் *சங்கு சக்கரம் ஏந்தி, பட்டு வஸ்திரங்கள் அணிந்து, நீலமேக வண்ணணாக,* மகா விஷ்ணு போன்று காட்சி அளித்தார். மேலும் ருக்மாயி தாயார் மஞ்சள் பட்டு வஸ்திரங்கள் அணிந்து, மயில் பதக்கம் பதித்து, மகாலட்சுமி போன்று காட்சி அளித்தார். *பல்லாயிரக்கணக்கான பழங்களை கொண்டு அலங்கரித்து,* உலக பிணி தீர்க்கும் வண்ணம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் *சமூக இடைவெளியுடன், முகக் கவசம் அணிந்து* சுவாமி தரிசனம் செய்தனர்.