தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா நோய்ப்பரவல் மிக வேகமாக உள்ளது. ஒரே நாளில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 13 பேர் உட்பட 27 ஆயிரத்து 397 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1,551998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இந்தப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 6 ஆயிரத்து 846 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 23 ஆயிரத்து 110 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 11 லட்சத்து 96 ஆயிரத்து 549 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.